தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் முக்கியமானது சமயபுரம் மாரியம்மன் கோயில். இது, திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே காவிரியின் வட கரையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. 
பொருளடக்கம் [மறை] 
 1 வரலாறு 
2 அம்மனின் வரலாறு 
3 அம்மனின் உருவம் 
4 திருவிழாக்கள் 
4.1 ஆடி வெள்ளி 
4.2 பூச்சொரிதல் விழா 
5 மக்கள் வருகை 
6 கோவிலுக்குச் செல்ல வழிகாட்டல் 
7 சமயபுரத்தின் மற்ற பெயர்கள் 
8 சமயபுரத்தில் உள்ள மற்ற கோவில்கள் 
9 மற்ற விவரங்கள் 
10 இவற்றையும் பார்க்கவும் 
11 வெளி இணைப்புகள் 
12 மேற்கோள்கள் 
வரலாறு[தொகு]:  சமயபுரம் மாரியம்மன் கோயிலின் முகப்புத் தோற்றம் தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர். இது ஒரு சோழ மன்னர் தன் தங்கைக்கு சீதனமாக ஒரு நகரையும் கோட்டையையும் உண்டாக்கிக் கொடுத்த இடமாகும். பிற்காலத்தில், பாண்டிய மன்னர்களின் படையெடுப்பால் அந்த கோட்டையும் நகரமும் அழிந்து வேம்புக்காடாக மாறியது. இங்கு அம்மன் கோவில் உருவாகியதற்கு பின்வரும் சம்பவம் காரணமென்று நம்பப்படுகிறது: 
 அம்மனின் வரலாறு[தொகு]:  சமயபுரம் மாரியம்மன் (சித்திரம்) வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், ஸ்ரீரங்கத்தில் இருந்த ஜீயர் சுவாமிகள், வைணவியை ஸ்ரீரங்கத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவரின் ஆணையின்படி, வைணவியின் விக்கிரகத்தை ஆட்கள் அப்புறப்படுத்துவதற்காக வடக்கு நோக்கி சென்று சற்று தூரத்தில் இளைப்பாறினார்கள். (அது தற்போதுள்ள இனாம் சமயபுரம்). பிறகு மாரியம்மனின் சிலையை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். (தற்போதுள்ள மாரியம்மன் கோவில் இருப்பிடம்). அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள். பின், அக்கம் பக்கத்தில் இருந்த கிராமத்து மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபட்டனர். இக்காலத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வரும்போது கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது அரண்மனை மேட்டிலிருந்த கண்ணனூர் மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோவில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே அவர்கள் வெற்றியும் கண்டார்கள். அம்மனுக்கு கோவிலையும் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனிக்கோவில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோவில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோவிலாக மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. 
 அம்மனின் உருவம்[தொகு]: சமயபுரம் மாரியம்மன் சிலை அம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி அமைந்துள்ளது.
[1] திருவிழாக்கள்[தொகு] ஆடி வெள்ளி[தொகு]: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளித் திருவிழா நடைபெறுகிறது. இதில் இலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். திருச்சியில் உள்ள அத்தனை பெண்களும் அன்னையை தரிசிக்க கட்டாயமாகச் செல்வர். அதுவும் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை மிகச்சிறப்பாக கொண்டாடுவர். பூச்சொரிதல் விழா[தொகு] மக்கள் வருகை[தொகு]:  கோயிலின் வாயிலில் மக்கள் கூட்டம் சமயபுரம் கோவிலுக்கு அம்மனை வழிபட தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வருகிறது. செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் மற்ற கிழமைகளை விட கூடுதலாக உள்ளது. விழாக்காலங்களில் இது இன்னும் அதிகமாகிறது. எ. கா. சித்திரைத் தேர்த்திருவிழா. தமிழக பக்தர்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களில் உள்ளவர்களும் பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் சமயபுரம் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். 
கோவிலுக்குச் செல்ல வழிகாட்டல்[தொகு] சமயபுரத்தின் மற்ற பெயர்கள்[தொகு]: சமயபரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ள பகுதிக்கு கீழ் காணும் பெயர்களும் உண்டு. கண்ணனூர் கண்ணபுரம் விக்ரமபுரம் மாகாளிபுரம் சமயபுரத்தில் உள்ள மற்ற கோவில்கள்[தொகு] 
வடக்கே --- செல்லாயி அம்மன் கோவில், 
போஜீஸ்வரன் கோவில் கிழக்கே --- உஜ்ஜயினி மாகாளி கோவில், முத்தீஸ்வரன் கோவில் 
மற்ற விவரங்கள்[தொகு] தீர்த்தம் --- பெருவளை வாய்க்கால் தீர்த்தம் --- மேற்கே உள்ள மாரி தீர்த்தம் ( தெப்பக்குளம் ) 
ஸ்தல விருட்சம் --- வேப்ப மரம் 
இவற்றையும் பார்க்கவும்[தொகு]: 
மாரியம்மன் கோயில் வீரபாண்டி 
கௌமாரியம்மன் திருக்கோயில் இருக்கன்குடி 
மாரியம்மன் கோயில் மோசூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் 


Enter your email address:

Delivered by FeedBurner